follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP3மேலும் சில பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

மேலும் சில பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

Published on

சுற்றுலாத் துறைக்குத் தேவையான ஆற்றல் பானங்கள், கண்காணிப்பு கேமரா அமைப்புகளுக்குத் தேவையான உபகரணங்கள் (CCTV), தளபாடங்கள் உற்பத்திக்குத் தேவையான மெல்லிய பலகைகள் (MDF) மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இதில் உள்ளடங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது இது மூன்றாவது தடவை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக இறக்குமதி செலவினங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 2020 ஆம் ஆண்டில், இறக்குமதி செலவு 16055 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது. இது 2021 இல் 20637 மில்லியன் டாலர்களாக காணப்பட்டது.

ஆகஸ்ட் 23, 2022 அன்று, 1465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி, இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் இருந்து நவம்பர் 23ம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் 1211 மில்லியன் டாலர்களை சேமிக்க முடியும். இந்த தொகையை ஒப்பீட்டளவில் கருத்தில் கொள்வோம். 2021 ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்கள் இறக்குமதிக்காக 1666.5 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளோம். மருந்துகளுக்காக 882.5 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. நீண்ட எண்ணெய் வரிசைகளின் போது, ​​எரிபொருளுக்காக 3742.9 மில்லியன் டாலர்கள் செலவழித்தோம். உரங்களுக்காக 158.2 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.

வர்த்தக சம்மேளனம், தொழில்துறை தொழில்முனைவோர், முதலீட்டு வாரியம் மற்றும் பிறவற்றின் கோரிக்கைகளின் பேரில் பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதிலிருந்து மூன்று முறை கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி, செப்டம்பர் 9-ம் திகதி 708 பொருட்களுக்கும், நவம்பர் 23-ம் திகதி 77 பொருட்களுக்கும், டிசம்பர் 19-ம் திகதி 10 பொருட்களுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பொருட்களின் இறக்குமதி குறித்து முறையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...