கொலை, கொலைச் சதி போன்ற குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் சக்திவாய்ந்த உறுப்பினரும் பாதாள உலகத் தலைவருமான மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிபானி இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இந்த உத்தரவை இன்று (20) பிறப்பித்தார்.
விசாரணையின் போது கெசல்வத்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர் 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி சந்தேக நபர் அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.