follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'ஐஸ்' போக்குவரத்தின் முக்கிய மையம் இலங்கை..- இன்டர்போல்

‘ஐஸ்’ போக்குவரத்தின் முக்கிய மையம் இலங்கை..- இன்டர்போல்

Published on

ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது.

இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘லயன் ஷிப்’ நடவடிக்கையின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளதுடன், 22 நாடுகளுக்கு இந்த ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் 500 பேர் போன பார்ச்சூன் நிறுவனங்களுக்கு சமமான கிரிமினல் கும்பல்களால் கடத்தப்படுவதாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் ஐஸ் போதைப்பொருட்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும், பல புதிய போதைப்பொருள் போக்குவரத்து வழிகள் உருவாகியிருப்பதாகவும் இன்டர்போல் தெரிவிக்கின்றது.

இந்த ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவை என தெரியவந்துள்ளதுடன், ஐஸ் போதைப்பொருளில் ஈடுபட்ட 24 இலங்கை கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...