follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்'இலங்கையைப் போன்று போராட்டப் பின்னணிக்குள் பாகிஸ்தான் விழாது'

‘இலங்கையைப் போன்று போராட்டப் பின்னணிக்குள் பாகிஸ்தான் விழாது’

Published on

இலங்கையைப் போன்று ஒரு போராட்டப் பின்னணிக்குள் தமது நாடு இழுக்கப்படாது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

லாஹூரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர், இலங்கையைப் போன்று தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தமது கட்சிக்கு இல்லை என தெரிவித்தார்.

எனவே, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு தூண்டுதலாக, டிசம்பர் 23 அன்று, தனது கட்சியின் கீழ் இருந்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றின் பதவிக் காலம் முடிவதற்குள் கலைக்கப்பட்டதாக கான் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரசில் செல்வாக்கு செலுத்துவதே இதன் நோக்கம் என்கிறார்.

ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார், அதன் பிறகு அவர் தற்போது அவசர தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தெற்காசியாவில் நிச்சயமற்ற போராட்டங்கள் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தத் தவறியதால் ஏற்பட்டதாக இம்ரான் கான் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...