follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP2IMF கடன் தாமதத்தினால் புதிய அமைச்சரவை நியமனங்கள் தாமதம்

IMF கடன் தாமதத்தினால் புதிய அமைச்சரவை நியமனங்கள் தாமதம்

Published on

அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்கள் நியமனம் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்த்த கடனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையும் இந்த நிலைக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் திகதிக்குள் கடன் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை கட்சியின் செயலாளர் இரண்டு தடவைகள் வழங்கியிருந்த போதிலும், அந்த பட்டியல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஆளுனர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள போதிலும், புதிய நியமனம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், மொட்டின் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ஐவரை நியமிக்க மொட்டுத்தரப்பினர் முன்மொழிந்திருந்ததுடன், முதலில் அவர்களை நியமிக்க இணக்கம் காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பேரின் பெயர்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Forbes உலக பணக்காரர் பட்டியல் வெளியீடு : அம்பானிக்கு பின்னடைவு

ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக...

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு களமிறக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு குழு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க...

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு?

இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின்...