follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை

Published on

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் 3 பில்லியன் டொலர் கடனுக்கு மேலதிகமாக அடுத்த வருடம் 5 பில்லியன் டொலர் கடனை இலங்கை பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்வவியில், பொதுச் சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் சுமார் 3 பில்லியன் டாலர்களை திரட்ட முடியும் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடான் கடனுக்கு மேலதிகமாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஏனைய சகல உபாயங்களிலும் கவனம் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மற்றும் உதவித் தொகைகள் தொடர்பில் அரசாங்கம் தற்போது அதிக கவனம் செலுத்தியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார் என்றும் அதன் மூலம் இன்னும் 2-3 பில்லியன்டொலர்களை திரட்ட முடிந்தால், நமது கருவூலம் மற்றும் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...