திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது குற்றமாக கருதி இந்தோனேசியா விதித்துள்ள சட்டங்கள் சுற்றுலா பயணிகளை பாதிக்காது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியா கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டங்களின்படி, திருமணமாகாதவர்கள் உடலுறவில் ஈடுபடுவோருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், திருமணம் செய்யாமல் உடன் வாழ்வோருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
எனினும், இந்தோனேசியாவுக்குச் சொந்தமான பாலி தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் திருமண நிலை சரிபார்க்கப்படாது என்று பாலியின் ஆளுநர் கூறுகிறார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில் மத அழுத்தம் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.