கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை திரும்புகையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தானத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்று 3 மணித்தியாலங்களின் பின்னர் காரின் சாரதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டஹடுவ பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.