follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP3மின்சார மீட்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு

மின்சார மீட்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு

Published on

மின்சார மீட்டர் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதனால், புதிய மின் இணைப்பு பெற, டெபாசிட் செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எவ்வாறாயினும், எமது விசாரணையில் கருத்து தெரிவித்த மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் [விநியோகப் பிரிவு 4] ரொஹான் சேனவிரத்ன, மின்சார மீட்டர் கம்பிகள் மட்டுமன்றி மின்மாற்றிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார். 300 முதல் 400 டிரான்ஸ்பார்மர்கள் தேவை என்றும், தற்போது 100க்கு மேல் மட்டுமே உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இம்மாதம் 6000 மின்சார மீட்டர்கள் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...