சுமார் 481 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு AZAMARA QUEST என்ற பயணிகள் கப்பல் இன்று (05) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது.
உலகளாவிய கொவிட் நிலைமைக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் இரண்டாவது கப்பல் இதுவாகும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த உல்லாசக் கப்பலில் இருந்து இறங்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்கா, உடவலவ யானைகள் சரணாலயம் மற்றும் சில சுற்றுலா விடுதிகளுக்குச் சென்றனர்.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பலின் கப்டன் ஜோஹன்னஸ் தைஸே கூறுகையில், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வசதிகள் அடிப்படையில் சிறப்பாக உள்ளது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யால, உடவலவ போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சுற்றுலா வழிகாட்டி அதிகாரி ஜயந்த விஜேதுங்க தெரிவித்தார்.
இந்த கப்பல் இன்று இரவு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருந்து இந்தோனேசியாவில் உள்ள சபான் துறைமுகத்திற்கு புறப்பட உள்ளது.
இணைப்புச் செய்தி
மற்றுமொரு சொகுசுக் கப்பலான Azamara Quest