இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மேலும் 41.5 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேற விருப்பம் தெரிவிக்கவில்லை.
18-29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 77.2 வீதமானோர் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது மிக முக்கியமான உண்மையாகும். 22 சதவீதம் பேர் மறுப்பு தெரிவித்தனர்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45.4 வீதமானவர்கள் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 52.5 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.