follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுசேலைனுக்கு தட்டுப்பாடில்லை

சேலைனுக்கு தட்டுப்பாடில்லை

Published on

நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்காக இரண்டு மாதங்களுக்குத் தேவையான சேலைன் மருத்துவ விநியோகத் திணைக்களத்தில் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் ஒரு மாதத்திற்கு போதிய சேலைன் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று முன்தினம் (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தவறான அறிக்கை என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. கண்டி பல்லேகலையில் உள்ள சேலைன் தொழிற்சாலையில் 12 இலட்சம் சேலைன் போத்தல்களும், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் 12 இலட்சம் சேலைன் போத்தல்களும் உள்ளதனால் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான சேலைன் உற்பத்தி செய்து வழங்க முடியும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

எனவே, வைத்தியசாலைகளில் சேலைன் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானவை என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய...