follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதிலினிக்கு துபாய் நாட்டிலும் வர்த்தக நிறுவனம்

திலினிக்கு துபாய் நாட்டிலும் வர்த்தக நிறுவனம்

Published on

தொழில் விவகாரங்களில் முதலீடு செய்து அதிக பலன் தருவதாக கூறி பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை ஏமாற்றி 1.3 பில்லியன் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும் கசுன் பெரேரா ஆகிய மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (30) உத்தரவிட்டார்.

அந்த வழக்குகளின் ஏனைய சந்தேக நபர்களான பொரல்லாலே சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

திலினி பிரியமாலி மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக ஏழு முறைப்பாடுகள் தமது திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

திலினி பிரியமாலி துபாய் நாட்டில் வர்த்தக நிறுவனமொன்றை பதிவு செய்து மோசடியாக சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி வர்த்தகம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது. மற்றும் சர்வதேச பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...