follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஅரிசியின் விலை ரூ.40 இனால் குறைவு

அரிசியின் விலை ரூ.40 இனால் குறைவு

Published on

ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்றைய தின (24) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல், 125 ரூபாய்க்கு, மில்காரர்கள் கொள்முதல் செய்தனர். மில் உரிமையாளர்கள் அறுபத்து நான்கு கிலோகிராம் கொண்ட நெல் மூட்டையை எட்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த போதிலும், நேற்று (24) ஒரு நெல் மூட்டை ஆறாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு விற்பனையானது.

இந்த பருவ அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டை நெல் 4500 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய பாரிய ஆலை உரிமையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ நெல் எழுபது ரூபாய்க்கு வாங்குவதே அவர்களின் இலக்காக உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். கொழும்பில்...

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு...

விஜித ஹேரத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின்...