இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பார்ச்சூன் பேரிசல் அணிக்காக விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
2021 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசல் ஜனித்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குசல், தற்போது மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.