follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதிருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை குறித்த அறிவிப்பு

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை குறித்த அறிவிப்பு

Published on

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ. ஏ.டி. எஸ். குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அட்டவணை விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் திகதி அறிவிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் தடம் புரண்டது தொடர்பான முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, ரயில் பாதையின் பாழடைந்த பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க வேகத்தடை விதிக்கப்பட்டது.

வேகத்தடை விதிப்பதால் ஏற்படும் ரயில் காலதாமதத்தை கருத்தில் கொண்டு ரயில் அட்டவணை திருத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ரயில் தாமதம் காரணமாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, அங்கு வரும் அதிகாரிகளுக்கு திட்டமிடப்பட்ட கடமை நேரத்திலிருந்து வருவதற்கு அரை மணித்தியாலமும், புறப்படுவதற்கு ஒரு மணிநேரமும் அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது.

கடமைக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அவகாசம் பெறும் அதிகாரிகள் மதிய உணவு நேரத்தின் போது இயன்றவரை சம்பந்தப்பட்ட கடமைகளை ஈடுகட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...