உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மின்சார தடை காரணமாக மூன்று அணு உலைகளும் செயலிழந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடியோ தொழில்நுட்பம் மூலம் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாடு முழுவதும் உள்ள எரிசக்தி மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.