பணப்பற்றாக்குறை காரணமாக ‘சுவ சரிய’ அம்புலன்ஸ் சேவையை நடாத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், ‘சுவ சரிய’ சேவைக்கு 22 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், ஆம்புலன்ஸ்களை பழுது பார்க்கக் கூட பணம் இல்லை என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ‘சுவ சரிய’ அம்புலன்ஸ் சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.