follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஓமான் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்கள் பற்றிய மற்றொரு தகவல்

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்கள் பற்றிய மற்றொரு தகவல்

Published on

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 77 பெண்களில் 12 பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதாகவும், மத்திய கிழக்கில் மனித கடத்தல் கும்பல்கள் செயல்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் இந்த அறிக்கையை வெளியிட்டது.

தூதரகத்தின் ஊழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக குறைந்தது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் ஓமானில் உள்ள பாதுகாப்பான வீட்டில் தங்கவைக்கப்பட்ட 77 பெண்களில் 65 பேர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யவில்லை.

பணியகத்தில் பதிவு செய்யாதவர்களை மீள அழைத்து வருவதற்கு இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திற்கு உதவ முடியாது எனவும், எனவே இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாத பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...