follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுதிரிகோணமடுவை அழித்தால் கடுமையான நடவடிக்கை

திரிகோணமடுவை அழித்தால் கடுமையான நடவடிக்கை

Published on

பொலன்னறுவை வெலிகந்த திரிகோணமடு வனப்பகுதியை அண்மித்துள்ள சூரியவெவ காப்புக்காட்டை யாராவது அழித்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறானதொன்று நடந்தால் உடனடியாக அழிவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம கேள்வி எழுப்பிய போதே மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜகத் சமரவிக்ரம :

“..பொலன்னறுவை வெலிகந்த திருகோணமடு வனப்பகுதியை அண்டியுள்ள சூரியவெவ காப்புக்காட்டை டோசர்களை பயன்படுத்தி திட்டமிட்ட குழுவொன்று அழித்து வருவதாக இன்று லங்காதீப பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. மனம்பிட்டிய ஊடகவியலாளர் நிமல் ஜயரத்ன இந்த தகவலை முன்வைத்துள்ளார். அதைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..”

விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சர் மஹிந்த அமரவீர:

“..அவரது கோரிக்கைக்கு கவனம் செலுத்துங்கள். அந்தக் காட்டை அழிக்கவே அனுமதிக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் உடனடியாக நிறுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முறையான சாகுபடித் திட்டத்தைத் தவிர, சுற்றுச்சூழலை அழிக்க அனுமதிக்க முடியாது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...