2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாதீட்டில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி கொண்டுள்ளது.
எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளதால் அதனை எதிர்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.