follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுநடை பயணத்திற்கு இடையூறு; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

நடை பயணத்திற்கு இடையூறு; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Published on

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 12 ஆம் திகதி களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடையூறு விளைவித்தமை ,  இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில், சட்டவாட்சியை பாதுகாக்கும் வகையிலும் அமைதியை பேணும் நோக்கிலும் பொலிஸாரின் ஒழுக்கத்தை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நடை பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கான காரணம், யாருடைய உத்தரவின் பேரில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது, யாரால்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது பொலிஸாரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல்களின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சத்தியக் கடதாசி மூலம் தகவல்களை சமர்ப்பிக்குமாறும் குறித்த கடிதத்தில் பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...