follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுரயில் தடம்புரள்வுகள் அதிகரிப்பு - இவ்வருடம் 42 சம்பவங்கள்

ரயில் தடம்புரள்வுகள் அதிகரிப்பு – இவ்வருடம் 42 சம்பவங்கள்

Published on

கடந்த வருடத்தினை காட்டிலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் இன்று ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.

பொல்கஹாவலையில் இருந்து இரத்மலானைக்கு சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் 42 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த வருடத்தில் 34 சம்பவங்களும், 2020 ஆம் ஆண்டில் 29 சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

ரயில் தடம்புரண்டால் அதனால் ஏற்படும் சேதத்திற்கான இழப்புக்களை ரயில்வே இயக்குநர்களிடமிருந்து வசூலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேகக்கட்டுப்பாட்டிற்கு ஏற்ப ரயில்களை இயக்குவதற்கு இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, சில ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என ரயில் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.