follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுவன விலங்குகளினால் ஆண்டுக்கு 54 பில்லியன் நட்டம்!

வன விலங்குகளினால் ஆண்டுக்கு 54 பில்லியன் நட்டம்!

Published on

இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபாய் பெறுமதியான பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும் விலங்குகளில் யானைகள், பன்றிகள், குரங்குகள் , மயில்கள், முள்ளம்பன்றி, அணில் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை அடங்கும்.

இவற்றில் காட்டு யானைகள் தவிர மற்ற ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் தொடர்பான விசேட அறிக்கையொன்றை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அந்த அறிக்கையின் பிரகாரம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” – வீட்டு மானியத் தொகை அதிகரிப்பு

'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...