மே 9 வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது குறித்த பொது பாதுகாப்பு செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்ததாவது, வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுப்பதில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கடமை தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கான நேர்காணல்கள் முடிவடைந்தன, மேலும் 2022 அக்டோபர் 10 ஆம் திகதிக்குப் பிறகு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு செயலாளர் மேலும தெரிவித்தார்.