follow the truth

follow the truth

March, 13, 2025
HomeTOP1கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Published on

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பெறப்பட்ட மின்னஞ்சல் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மின்னஞ்சல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் விமான நிலைய வலைத்தளத்திலிருந்து அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக தரவுகளைத் திருடி இதைச் செய்திருக்கலாம் என்று உளவுப் பிரிவினர் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் இராணுவத்தின் இணையதளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் மூலமே குறித்த மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்...

அதிவேக நெடுஞ்சாலை அருகில் வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம்...