follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஹரக் கட்டாவை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

ஹரக் கட்டாவை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

Published on

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ”ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஹரக் கட்டாவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சர்வதேச சிவப்பு பிடியாணைக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக போலியான பெயர் ஒன்றில் துபாயில் வசித்து வந்தபோது அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...