follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமுதலாவது சிங்களப் பத்திரிகைக்கு 160ஆவது ஆண்டு

முதலாவது சிங்களப் பத்திரிகைக்கு 160ஆவது ஆண்டு

Published on

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் வெளிவந்த முதலாவது சிங்களப் பத்திரிகையான “லக்மினி பஹன” எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதியுடன் 160 ஆண்டு நிறைவைக் காண்கிறது.

குணதிலக்க அத்தபத்து சல்பிடி கோறளயே முதலியார்  தலைமையில் இரத்மலானை பரம தம்ம சைத்தியராமாதிபதி அதிவணக்கத்துக்குரிய வளானே ஸ்ரீ சித்தார்த்த மா தேரரின் வழிகாட்டலில் இந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை ஆசிரியராக புகழ்பெற்ற அறிஞர் பண்டிதர்  கொக்கல பணியாற்றினார்.

நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பத்திரிகை அக்கால நிலவரப்படி ‘ஒரு காசு’க்கு விற்பனை செய்யப்பட்டது. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயசூரிய ஆராச்சிகே ஹென்ட்ரிக் பெரேரா இதன் வெளியீட்டாளராக செயற்பட்டுள்ளார். கொழும்பு வுல்பெண்டல் தெருவில் நடத்தப்பட்டு வந்த  அச்சகத்தில் இந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டது.

பின்னர்  குமாரதுங்க முனிதாச ஆசிரியரின் தலைமையில் பல வருடங்கள் இந்தப் பத்திரிகை வெளிவந்தது. மாத்தறை திக்வெல்ல,  வவுருகன்னல மகா விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி திக்வெல்ல திஸ்ஸ மா தேரர் அவர்கள் உயிரிழக்கும் வரை  “லக்மினி பஹன” பத்திரிகை அச்சிடப்பட்டு வந்தது.

இலங்கை ஊடகத்துறையிலும் பத்திரிகை வரலாற்றிலும் அழியா நினைவுச் சின்னமாக விளங்கும் “லக்மினி பஹன” பத்திரிகையின் 160ஆவது ஆண்டு நிறைவு விழா, இலங்கை ஊடகத்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...