follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபாண் விலை 300 ரூபாவா?

பாண் விலை 300 ரூபாவா?

Published on

சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பாண் ஒரு இராத்தலின் விலை 300 ரூபா வரை உயரலாம் என ஏற்கனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்திருந்தார்.

ஆனால் இன்று விடயம் தொடர்பான அமைச்சர் நெவில் பெர்ணாண்டோவோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாண் விலையை அதிகரிக்காமல் இருக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்தித்துள்ளதா அதன் தலைவர் என்.கே ஜயவர்தன அறிவித்துள்ளார்.

அதன் படி இலங்கையின் முன்னணி கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டு 50 கிலோ மூட்டை ஒன்றை 13500 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டுக்குள் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டை குறைக்க விரைவில் கோதுமை மா இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டுக்குள் கோதுமை மா கருப்பு சந்தை ஒன்று உருவாகியுள்ளது என்றும் அங்கு 13500 ரூபா மூட்டை ஒன்று சுமார் 18500 ரூபா வரைவிற்பனை செய்யப்படுகின்றது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...