follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP1நாட்டில் கொவிட் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது

நாட்டில் கொவிட் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது

Published on

நாட்டில் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது.

நேற்று(09) வரையிலான தரவுகளின் படி 10,211,537 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 870 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2 இலட்சத்து ஆயிரத்து 834 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்;டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

9 ஆயிரத்து 778 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 669 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. 13 ஆயிரத்து 40 பேருக்கு மொடெர்னா இரண்டாம் தடுப்பூசியும், 30 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அதேவேளை 14 ஆயிரத்து 279 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 507 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி ஒருவருக்கு செலுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” – வீட்டு மானியத் தொகை அதிகரிப்பு

'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...