நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளிலிருந்து முற்றாக மீள்வதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்றிடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையில் காணப்பட்ட பிரதான சிக்கல்களை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.