follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுபொப் மாலியை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பொப் மாலியை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Published on

போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேநபரான ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரவ்வை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி பேருவளை கடற்பரப்பில் 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நியைில், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, களுதுர சமிந்த தாப்ரேவ் என்ற இயற்பெயரை உடைய, ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

குறித்தக் சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருப்பின் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் 071-8592727 அல்லது 011-2343334 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.