follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களுக்கு புதிய பஸ் சேவை

பாடசாலை மாணவர்களுக்கு புதிய பஸ் சேவை

Published on

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவ​டையும் நேரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு இந்த புதிய பஸ் சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்படும் குறித்த பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனைத்தவிர, மாணவர்களுக்கான சிசுசெரிய பஸ் சேவையை முறையாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சினையால், வாரத்தில் 3 நாட்களுக்கு மாத்திரமே பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், அடுத்த வாரம் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து சனிக்கிழமை நடைபெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...