நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார அலுவலகம் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையை விடுத்துள்ளது.
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும், மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவதற்கு இடமளிக்காமல்ல வீட்டிலேயே பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிள்ளைகளுக்குக் காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.