follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதிகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகம்

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகம்

Published on

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட ஒருநாள் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அவசர தேவையின் நிமித்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதாயின் தமது தகவல்களை 070 63 11 711 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில், கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான திகதியை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...