follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை

Published on

ஜனாதிபதி மாளிகையிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் நாளைய தினம்(27) விசாரணை நடத்தப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்காக மேல் மாகாண பிராந்திய அலுவலக அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் சேத மதிப்பீட்டு நடவடிக்கைள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

எனவே சேத மதிப்பீடுகள் தொடர்பில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர், சேத விபரங்கள் தொடர்பில் தயாரிக்கப்படும் அறிக்கையானது ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்படும் என பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...