follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஎரிசக்தி துறையை வெளிநாடுகளிடம் வழங்குவது பாரதூரமானது!- சஜித்

எரிசக்தி துறையை வெளிநாடுகளிடம் வழங்குவது பாரதூரமானது!- சஜித்

Published on

நாட்டின் எரிசக்தி முகாமைத்துவ செயற்பாடுகளை வெளிநாடுகளுக்கு வழங்கி நாட்டின் மின்விளக்கு ‘ஸ்விட்சை’ வெளிநாடுகளிடம் ஒப்படைத்தால் நாடு இருளில் மூழ்கும் நிலையே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி முறைமையை மேம்படுத்தும் வகையிலான புதிய கொள்கையை உருவாக்குவதே சிறந்தது. ஆனால் பெரும்பாலானோர் விற்பனை செய்து அல்லது தனியார்மயமாக்குவதையே செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை ஒரு தேசிய வளம் என்பதோடு அதைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கு உடனடியாக திட்ட வரைவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...

வடக்கு ரயில் சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...