நாட்டுமக்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிலவும் நெருக்கடியை உடனடியாக சமாளிக்க முடியும். அத்தோடு எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை மூன்று மாதங்களுக்குள் நீக்க முடியும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துகீச மற்றும் ஆங்கிலேய பாணியிலான அரசியல் முறைமையை கடைப்பிடித்து ஆட்சிசெய்த கடைசி ஜனாதிபதி என்று ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் பேசப்படுவார் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.