follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுபோராட்டத்திற்கு முன்னரை விட தற்போதுள்ள நிலை மிக மோசமானது! - சஜித்

போராட்டத்திற்கு முன்னரை விட தற்போதுள்ள நிலை மிக மோசமானது! – சஜித்

Published on

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிந்திருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலையானது முன்னைய நிலையை விட மோசமானது என்று எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய சபை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புகள், வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தேசிய சபைக்கு கொண்டு வரப்படும் முற்போக்கான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...

வடக்கு ரயில் சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...