கண்டி ஜோர்ஜ் சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த ‘கோட்டா கோ கம’ பேராட்டக்களமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த பெரஹெர உற்சவத்தினையொட்டி அதனை உருவாக்கியவர்களினாலேயே அகற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் குறித்த பெரஹர உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் போராட்ட களத்தை அகற்றுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய போராட்டக்களமானது அகற்றப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்கள் முறையற்ற ஆட்சியை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான போராட்ட களம் மீண்டும் உருவாக்கப்படும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.