follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுபொலிஸாரை தாக்கிய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

பொலிஸாரை தாக்கிய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

Published on

முறைப்பாடு ஒன்றினை விசாரிக்கசென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

நேற்று பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குறித்த சந்தேகநபர் தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிடிகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர். இதன்போது சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபருக்கு எதிராக 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்தமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...

வடக்கு ரயில் சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...