சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப் பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்பதியினரான இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணவனும், மனைவியும் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் பொதி செய்து; விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் 35 மற்றும் 37 வயதுடைய இளம் தம்பதியினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைக்கப்பட்ட போது இருவரும் வீட்டிற்குள் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.