மரக்கறிகளின் விலைகள் 30 தொடக்கம் 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் பிரச்சினை மேலும் குறைவடையுமானால் மரக்கறிகளின் விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு குறைந்தளவு மரக்கறி தொகைகளே கிடைத்ததாகவும் தற்போது எரிபொருள் விநியோகத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையால் நாட்டின் வேறு பிரதேசங்களிலிருந்து தமது பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைக்கும் மரக்கறி தொகைகள் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு நேற்று அதிகாலை முதல் அதிகமான மரக்கறிகள் மற்றும் பழவகைகள் கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.