follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுநியூசிலாந்து தாக்குதல் : காத்தான்குடியில் காண்பிக்கப்பட்ட வீடு சர்ச்சையானது

நியூசிலாந்து தாக்குதல் : காத்தான்குடியில் காண்பிக்கப்பட்ட வீடு சர்ச்சையானது

Published on

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய நபரின் செய்தி அறிக்கையிடலின் போது தனியார் தொலைக்காட்சியொன்றில் காத்தான்குடி பிரதேசமும் வீடு ஒன்றின் காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது.

கடந்த நான்காம் திகதி இரவு சிங்கள, தனியார் செய்திச் சேவையின் இரவு நேர செய்திகளில் இந்த செய்தி ஒளிரப்பப்பட்டது.

எனினும், இந்த வீடு தாக்குதல் தாரியின் வீடு அல்ல என்று எமது காத்தான்குடி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

குறித்த செய்தியில் ‘தாக்குதல் தாரியின் வீடு இது” என்று குறிப்பிடப்படாத போதிலும், இதுதான் தாக்குதல் தாரியின் வீடு என்ற விம்பம் ஏற்படுத்தப்படுகிறது.

தீவிரவாதத் தாக்குதல் நடத்திய ஒருவரின் செய்தி அறிக்கையிடலின் போது காண்பிக்கப்படும் இவ்வாறு காட்சிகளினால் பிழையான புரிதல்கள் சித்தரிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு இதனால் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...