follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதபால் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

தபால் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

Published on

அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால்மா அதிபர் ரன்ஞித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து தபால் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுபாடு காரணமாக உள்ளக தபால் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரன்ஞித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...