கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு அதிரடிப்படையின் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரத்தின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை அதிபர், லியனகேவை பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
சனிக்கிழமையன்று பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே பணியில் இருந்த காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் பல செய்தியாளர்கள் காயமடைந்தனர்.