follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜப்பானிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவி

ஜப்பானிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவி

Published on

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தனது நிர்வாக காலத்திலும் தற்போதும் மேம்படுத்துவதற்கு ஜப்பான்  காட்டிய அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

மேலும், இலங்கைக்கு தேவையான மருந்துகள் குறித்து தாம் முன்னதாக ஜப்பானிய தூதரகத்திற்கு அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்நிலையில், இம்மாதத்தில் ஜப்பானிய அரசாங்கத்தினூடாக 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்க தயாராக இருப்பதாக ஜப்பானிய தூதுவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...