follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஇந்த நாட்டை கட்டியெழுப்ப 5 ஆண்டுகளாவது ஆகும்! - சஜித்

இந்த நாட்டை கட்டியெழுப்ப 5 ஆண்டுகளாவது ஆகும்! – சஜித்

Published on

நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் எனவும், 6 மாதத்தில் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில், 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது. அவ்வாறு கூறும் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தால் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...