புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தற்பொழுது தங்க நகைகளை மக்கள் கொள்வனவு செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தங்க நகைகளை விற்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.