தம்புள்ளை- அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நேற்றிலிருந்து ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்பட்டது.
தமது எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கிடைக்கும் எரிபொருளை பொதுமக்களுக்கும், பிரதேசத்தில் அளப்பரிய சேவையாற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் வழங்க தீர்மானித்திருப்பதாக குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களை வரிசையில் காத்திருக்க வைக்கக்கூடாது என்பதற்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக எரிபொருள் நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.